சந்தையில் தர்பூசணி விற்கும் ஆம்புலன்ஸ்! மோடி தொகுதியான வாரணாசி அரசு மருத்துவமனையின் அவலம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், அம்மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதையும், அதிகார வர்க்கத்தின் திமிரையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மருத்துவப் பயனாளிகளின் உயிர் காக்க ஓட வேண்டிய 108 ஆம்புலன்ஸ்கள், இன்று வாரணாசியின் மண்டி மார்க்கெட்டில் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்து வியாபாரம் செய்யும் வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் குடும்ப நிலத்தில் விளையும் தர்பூசணிகளைச் சந்தைக்குக் கொண்டு செல்ல, அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் சாதாரணமானதல்ல. “ஆம்புலன்ஸ் சும்மா தானே நிற்கிறது” என மருத்துவமனை ஊழியர்களே கூறும் அளவுக்கு நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருப்பது வேதனையானது. ஏழை மக்கள் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் திண்டாடும் சூழலில், ஆளுங்கட்சியினரின் தனிப்பட்ட லாபத்திற்காகப் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.

இரட்டை எஞ்சின் அரசு எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆட்சியில், அரசு இயந்திரம் ஒரு தனிநபரின் வீட்டு வேலைக்காரனைப் போலச் செயல்படுவது ஜனநாயகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது. தர்பூசணி ஏற்றிச் செல்லும் நேரத்தில், விபத்தில் சிக்கிய ஒருவருக்கோ அல்லது பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கோ இந்த வாகனம் தேவைப்பட்டிருந்தால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்?

மோடியின் உன்னத தொகுதி என்று கூறும் வாரணாசியில், அரசு மருத்துவமனையே வியாபாரக் கூடாரமாக மாறியிருப்பது கண்டிக்கத் தக்கது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ‘மக்களுக்கான அரசு’ என்பது வெறும் காகிதப் பேச்சாகவே முடிந்துவிடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *