புதுடில்லி ஏப்.7 இந்தியாவில் ஒரே நாளில் 5,335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்கு 25,587 பேர் சிகிச்சை பெற்றுவரு கின்றனர். 2,826 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி கரோனா தொற்று எண்ணிக்கையானது 5,000-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் டில்லி, மகாராட்டிரா, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதி கரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக் கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின் பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா 5 ஆயிரத்தை தாண்டியது
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books