‘கடவுள் உபயம்’ கோவில் தேர் குடை சாய்ந்து பக்தர் காயம்

1 Min Read

கள்ளக்குறிச்சி, ஏப்.7 கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. பங்குனி பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 29-ஆம் தேதி கோவில் துவங்கி தொடர்ந்து தினந்தோறும்  தேரோட் டம் நடை பெற்று வந்தது.  அலங் கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் சிலையை இழுத்து வந்தனர். அப் போது அங்கு இருந்த மரம் ஒன்றில் தேரின் குடை பட்டு கழண்டு கீழே விழுந்தது, முதலில் அங்குஇருந்த மின்சாரக் கம்பியில் விழுந்தும் பின்னர் கீழே விழுந்தது, கோவில் தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டு இருந்த ஒரு நபர் மீது கோவில் குடை விழுந்து தலை மற்றும் தோளில் காயமடைந்தார். அவரை உடனடி யாக முதலுதவி செய்து மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *