ஏஅய்சிடிஇ-ன் புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு

1 Min Read

சென்னை, ஏப். 7- பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஅய்சிடிஇ அறி வுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங் கிய வருடாந்திர கால அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஅய்சிடிஇ) வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண் டுக்கான(2023-2024) காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஅய்சிடிஇ தற்போது வெளியிட்டுள் ளது. 

அதன் விவரம் வருமாறு:

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்க ளுக்கு ஏஅய்சிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகள் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறும். தொடர்ந்து கல்லூரி களுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்கு தலை ஜூலை 31ஆம் தேதிக்குள் பல் கலைக்கழகங்கள் உறுதிசெய்ய வேண் டும். சேர்க்கை கலந்தாய்வை முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும்.

தொலைதூர, திறந்தநிலை மற்றும் இணையவழிப் படிப்புகளைக் கற்றுத் தரும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் யுஜிசி வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கான தேதி விவரங்கள் குறிப்பிடப் படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *