தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைத் தந்தால் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது! தூத்துக்குடியில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி!

தூத்துக்குடி, ஏப்.2– நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனி மொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து, திமுக சார்பில் நாளை எனது பிரச்சாரத்தை கீழடியில் தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

தூத்துக்குடியைப் பொறுத்தவரை, கீதா ஜீவன் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் என்று என்னால் சொல்ல முடியும். காரணம், தொடர்ந்து மக்கள் பணியை செய்து வரும் ஒருவர்; தொகுதி மக்களுடன் பரிச்சயம் உடையவர். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளிலும், அமைச்சராக அவர் செய்துள்ள பல பணிகளிலும், நமது முதலமைச்சர் பெருமை சேர்த்த வகையில் பணிகளை செய்து இருக்கிறார்.

திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி யாகவும், முக்கியமாக பெண்களுக்கான, பெண்களை உயர்த்தக் கூடிய ஆட்சியாக அமைந் துள்ளது. இளைஞர்களுடைய எதிர் காலத்தைப் பற்றி திட்டமிடக்கூடிய பல்வேறு தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்து வேலை வாய்ப்பை உருவாக்கிய ஆட்சியாக அமைந் துள்ளது.

மற்ற தேர்தல் அறிக்கையை மக்கள் திரும்பிக்கூட பார்க்காத சூழலில், திமுக தேர்தல் அறிக்கையை கொண்டாடக் கூடிய சூழ்நிலை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திமுக எந்த வாக்குறுதியை தந்தாலும் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.

நம்முடைய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் தந்து இருக்கக்கூடிய வாக்குறுதிகளை மக்கள் ஆவலோடும், திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி மீண்டும் அமையப் போகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று வோம்.

புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் எதிர்ப்புகள் இருப்பது குறித்த கேள்விக்கு, வேட்பாளர்களை மாற்றி அறிவிக்கும் போது சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போதும் சில சர்ச்சைகள் உருவாகும். எல்லோருக்கும் தெரியும். நாம் கருத்தியலால் ஒன்றுபட்டவர்கள். அதனால், ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம், வெற்றியை நோக்கி பணியாற்றுவோம். அதேபோன்று எந்தப் பகுதியில் நாம் புதிய வேட்பாளரை அறிவிக்கும் போது அங்கு இருப்பவர்களுக்கு சிறிய வருத்தம் இருந்தாலும் அனைவரும் திராவிடர் கழகத் தோழர்களாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு பதில் சொல்ல வேண்டியது அவரே. அவரது குற்றச்சாட்டின்படி சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது, தேசிய அளவில் தமிழ்நாட்டில்தான் குற்றங்கள் குறைவாக உள்ளது. குற்றங்கள் நடந்தால் கூட அதில் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி. விரைந்து நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை விட, நிச்சயமாக தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவாக உள்ளது. அவர்கள் கூட்டணியில் உள்ளவர்கள் தவறு செய்தவர்களை எவ்வாறு காப்பாற்றினர் என்பதும் அனைவருக்கும் தெரியும். இன்று குற்றம் செய்யக் கூடியவர்களுக்கு எப்படி மிக விரைந்து தண்டனை கொடுக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, முன்னாள் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவனை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கி, கனிமொழி கருணாநிதி  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *