திருச்சி, திருவெறும்பூர் கழக நகர செயலாளர் அ.சிவானந்தம் மகள் சி.ரா.யாழினி 21ஆவது பிறந்தநாள் (31-3-2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 வழங்கினார். வாழ்த்துகள்!
– – – – –
ஞா.செல்வி-நா.சீனிவாசன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் சேத்பட்டில் (திருவண்ணா மலை மாவட்டம்) திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் 13.11.2022 அன்று நடை பெற்றது. தற்போது கூடுவாஞ்சேரியில் வசிக்கும் இந்த இணையர்களின் ஆண் குழந்தைக்கு 27.3.2026 அன்று மறைமலைநகரில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில், சிறப்புரையாற்றிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களால் அன்பு என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்விதமாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது.
