சமூகநீதியின் சாதனை! அவிநாசி தொகுதியில் 26 வயதில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கும் இளம் மருத்துவர் யார் இந்த கோகிலா மணி?

1 Min Read

திருப்பூர், மார்ச் 30- என்.டி.ஏ கூட்டணி சார்பில் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் களம் இறங்க உள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக 26 வயது இளம் அறிமுக வேட்பாளரை தி.மு.க. தேர்தல் களத்தில் இறக்கியிருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது.

கோகிலா மணி

2026 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தரப்பில் வேட்பாளராகக் களமிறங்கும் நபர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 29.3.2026 அன்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது. தி.மு.க-வின் இளம் வேட்பாளர் என 26 வயதான மருத்துவர் கோகிலா மணி என்பவரை திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் களமிறக்கியுள்ளனர்.

என்.டி.ஏ கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் களம் இறங்க உள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக 26 வயது இளம் அறிமுக வேட்பாளரை தி.மு.க. தேர்தல் களத்தில் இறக்கியிருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது. யார் இந்த கோகிலா மணி என்கிற தேடல் மேலோங்கியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமலை கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் 26 வயதான கோகிலா மணி. திருமணம் ஆகாதவர் இவர். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் விவசாயக் கூலித் தொழிலைப் பின்புலமாகக் கொண்டவர்கள்.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டம் பெற்ற இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவ அனுபவம் பெற்றிருக்கிறார். கடந்த 2025ஆம் ஆண்டு முதல் அவிநாசி வட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மக்கள் செயல்பாடுகள் மூலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். இவரைத்தான் அறிமுக வேட்பாளராக தி.மு.க. களம் இறக்கியிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *