தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண உயர்வை மறுபரீசீலனை செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

2 Min Read

சென்னை, மார்ச் 30- தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுங்கக் கட்டணம் உயர்வு

இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாட்டில் உள்ள சிறீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாங்குநேரி, வாணியம்பாடி உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

இந்த உயர்வு வாகனத்தைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.100 வரை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து துறையில்
ஏற்படும் பாதிப்புகள்

இந்த கட்டண உயர்வு பொதுப் போக்கு வரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிக் கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இயக்கச் செலவு அதிகரிப்பு: ஒரு ஆம்னி பேருந்துக்கு தினமும் சராசரியாக ரூ.2,000 சாலை வரியாக செலுத்தப்படும் நிலையில், கூடுதலாக ரூ.2,000-க்கும் மேல் சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இது உரிமையாளர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.

கட்டண உயர் வைத் தவிர்க்க வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து கிராமப்புறச் சாலைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் உள்ளூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சேதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

முக்கிய கோரிக்கைகள்

நலிவடைந்து வரும் போக்குவரத்து துறையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தேசிய நெடுஞ் சாலைகளில் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள்: சுங்கச்சாவடிகளில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தித் தர வேண்டும். மக்களின் நலன் மற்றும் போக்குவரத்துத் துறையின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *