சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய கடைசி வாய்ப்பு:
2025 மே 21 அன்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் சில தேர்வர்களின் சான்றிதழ்களில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறைபாடுகள் உள்ள தேர்வர்கள் நேற்று (28.3.2026) முதல் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் விடுபட்ட அல்லது சரியான ஆவணங்களை மீண்டும் பதிவேற்றலாம்.
எப்படி செய்வது?
தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘ஒருமுறை பதிவு’ (OTR) கணக்கின் வாயிலாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என செயலாளர் பானோத் மருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு – II:
உத்தேச விடைகள் வெளியீடு: கடந்த மார்ச் 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு – II (நேர்முகத் தேர்வு பதவிகள்) க்கான உத்தேச விடைகள் (Tentative Answer Keys) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பாடப்பிரிவுகள்: தமிழ் தகுதித் தேர்வு, பொதுப் பாடங்கள், வேளாண்மை, சட்டம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான விடைகள் வெளியிடப் பட்டுள்ளன.
விடைகளில் ஏதேனும் சந்தேகம் அல்லது ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் இணையதளம் மூலம் முறையிடலாம்.
தேர்வாணைய இணையதளத்தில் உள்ள “Answer key Challenge” என்ற விண்டோ மூலம் மட்டுமே முறையீடு செய்ய வேண்டும்.
அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் கோரிக்கைகள் கண்டிப் பாக ஏற்கப்படமாட்டாது.
