பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை!

1 Min Read

ஜெயங்கொண்டம், மார்ச் 29- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்கு லேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தி வைத்த டேக்வாண்டோ போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

3ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா  பெல்ட் பட்டங்களை பெற்றுள்ளனர்.

இந்த சாதனை மாணவர்களின் கடின உழைப்பையும், தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியையும் பிரதிபலிக்கிறது.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினர்.

இந்த பயிற்சியை வழங்கிய ஹிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்களுக்கும் பள்ளி நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *