பெரியாரைப் பின்பற்று

1 Min Read

பெரியாரிடத்தில் பிழைசெய் யாதே!

பெரியாரிடத்தில் பிழைசெய் தவர்கள்

வாழ்கின் றார்என் றெண்ணுதல் மடமை!

அவர்கள் வாழ்கிலர்; மாய்கின் றார்கள்.

பெரியார் தம்மைப் பின்பற்ற வேண்டும்

பெரியார் தம்மைப் பின்பற்று கின்றவர்

மாய்கின் றார்என எண்ணுதல் மடமை

அவர்கள் மாய்கிலர்; வாழு கின்றனர்.

சாக வேண்டிய தமிழர் சாகிலர்:

வீழ வேண்டிய தமிழர் வீழ்கிலர்!

வறள வேண்டிய தமிழகம் வறண்டிலது

காரணம் பெரியார் கண்கா ணிப்பே !

அன்னார் நினைப்பெலாம் தமிழர்க் கேயாம்

உரைப்பன தமிழர்க் குறுதி பயப்பன

அவர்தாம் தமிழர்க்குத் தமிழகம் அளிப்பவர்

அந்த முதியோர் ஆற்றலைத் தாண்டிநீ

எங்கே ஓடி எதுபெற முடியும்?

மலையுச்சிக் கப்பால் பிலத்தின் கீழ்ப்படி!

புகழ்வேண் டாமா உனக்கு? மிகமிக

அறம்வேண் டாமா உனக்கு? நிறம்பல

கூறித் தமிழரைக் கொல்வார் குதிகால்

நரம்பை வெட்டுதல் நல்ல தொண்டல்லவா?

என்செய வேண்டும் இதற்கெலாம் எண்ணுக!

என்றும் பெரியார் நன்னெறி பற்றுக!

தப்புக் கணக்குப் போடாதே

செப்பேட்டில் உன்புகழ் செதுக்குக நீயே!

(‘குயில்’ – 17.2.1959)

(‘விடுதலை’ – 22.2.1959, ப.4)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *