ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

அரசியல்

கேள்வி 1 : வயது அதிகமானபின் மறதி நோயுள்ள ஒருவர் பெரிய அளவில் சாதிக்க முடியுமா?

-ஓவியன், சென்னை-106

பதில் 1 : வயது அதிகமானால் மறதி ஏற்படுவது தவிர்க்க இயலாதது, இயல்பானதுதான்! ஆனால், மன உறுதியுடன் செயல்படும் எவராலும் – எந்நிலையிலும் சாதிக்க முடியும். மனமிருந்தால், உறுதியான இலக்கு நிர்ணயித்து உழைத்தால், உழைப்பின் வாரா வெற்றிகள் உளவோ!

கேள்வி 2 : வளரிளம் பருவ (ஆன்மிகத்தில் நாட்டமுள்ள) மாணவர்களிடம் பெரியாரின் கருத்துகளை புரிய வைக்கப் பொதுவாக எவ்வழியைப் பின்பற்றவேண்டும்?

– கே.பாண்டுரங்கன், பழனி

பதில் 2 : அவர்களை ஈர்க்கும் வகையில் பரப்புரையை நேருக்கு நேர் – கலந்துரையாடல் போன்று நடத்தினால் நல்ல மாற்றத்தை அவர்களுக்குள் உருவாக்கும்!

கேள்வி 3 : நங்கநல்லூர் – மூவரசம்பட்டு பஞ்சாயத்துக் குளத்தில் கடவுளர் சிலையைக் முக்கி எடுக்கும் ‘தீர்த்தவாரி’ என்ற நிகழ்ச்சியில் 5 இளம் வயது அர்ச்சகர்கள் உயிரிழந்துள்ளதுபோன்ற நிகழ்வுகளை இனியும் நடக்காமல் தடுப்பது யார் பொறுப்பு?

-விஜயகுமார், செய்யாறு

பதில் 3 : அக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்படியான கோயில் அல்ல; தீர்த்தவாரி நடத்த அத்துறையின் அனுமதியும் பெறப்படவில்லையே!

அரசியல்

கேள்வி 4 : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதானி விவகாரத்தை மூடி மறைப்பதற்காக ஆளுங்கட்சியாலேயே தொடர்ந்து முடக்கப்படுவது ஜனநாயகக் கோட்பாட்டை சிதைக்காதா?

– ஆதித்தமல்லன், மடிப்பாக்கம்

பதில் 4 : இதுவரை மக்களவையில் துணை சபாநாயகரே இல்லையே, அதுவே ஜனநாயகமா? புரியவில்லை!

கேள்வி 5 : ”மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள இன்றைய தி.மு.க. ஆட்சியைவிட, முன்பிருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியே மேலானது” என்று சிலர் கூறுகிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

– கே.சுந்தரம், திருநெல்வேலி

பதில் 5 : திருந்தாத ஜென்மங்கள் – இன்னமும் இருக்கத்தானே செய்கின்றன!

கேள்வி 6 : ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது ஏதோ சாதாரண நிகழ்வுபோன்று ஆகிவிட்டதே, பெரிய அளவிற்குக் கண்டனங்களோ, எதிர்ப்புகளோ இல்லையே, ஏன்?

– இரா.இராஜூ,  வடலூர்

பதில் 6 : காங்கிரஸ் இதற்குரிய கண்டனத்தை பெரியதாக நடத்திட போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதே முக்கிய காரணம். கட்சியில் கோஷ்டிச் சண்டைகளே மூலகாரணம்!

கேள்வி 7 : வயதானவர்களை அவர்களது பிள்ளைகள் சரி வர பராமரிப்பதில்லையே, ஏன்?

– கே.சுந்தரமூர்த்தி, திருநெல்வேலி

பதில் 7 : ‘மக்கள் தந்தைக்கு ஆற்றும் உதவி’ இதுதான் இந்த யுகத்தில் போலும்! ‘நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா’ பாட்டொலிதான் ஒலிக்கின்றது.

கேள்வி 8 : பிரதமர் மோடியின் வருகையால், தமிழ்நாட்டில் அரசியல் (கூட்டணி) மாற்றம் ஏற்படுமா?

– ச.சங்கர், செங்கல்பட்டு

பதில் 8 : ஒருபோதும் ஏற்படாது; புளிச்ச மாவுதான்!

அரசியல்

கேள்வி 9:  சிறையில் கைதிகள் மரணம் தொடர்ந்து நடைபெறுவது, ஆட்சியாளர்களுக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்தாதா?

– ச.சரண்யா, சத்தியவேடு

பதில் 9 : நிச்சயம் ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த கவனம் இத்துறையில் மிக முக்கியம்!

கேள்வி 10 : அ.தி.மு.க.வில் மேலும் ஒன்றரை கோடி உறுப்பினர்களை சேர்ப்பதாகச் சொல்கிறார்களே?

– வே.காசி, வந்தவாசி

பதில் 10 : எந்த அ.தி.மு.க.வில்…? இ.பி.எஸ். அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அ.தி.மு.க., மற்ற பிரிவுகளா? பா.ஜ.க. நீங்கிய அ.தி.மு.க. குழுவா? புரியவில்லை! கூட்டம் சேரலாம், கொள்கை என்ன?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *