விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன! தொல்.திருமாவளவன்

சென்னை, மார்ச் 28- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன என்று அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (27.3.2026) பேச்சு வார்த்தை மேற்கொண்டார்.

திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன் பேசியதாவது, திமுக பேச்சுவார்த்தை குழுவோடு இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசிகவின் 8 தொகுதிகள் அடையாளம் கண்டு உள்ளோம். திமுக – விசிக இடையே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டது.

விருப்பமான தொகுதிகள்

எந்தெந்த தொகுதிகள் என முறைப்படி முதலமைச்சர் அறிவிப்பார். எங்களுக்கு திருப்தி கரமாக பேச்சுவார்த்தை இருந்தது. விருப்பமான தொகுதிகள் கிடைத் துள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய பிறகு முதலமைச்சர் நாளை (29.3.2026) அறிவிப்பார்.

திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என காத்து இருப்பவர்கள் ஏமாந்து தான் போவார்கள். எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதால் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்துப் பேசும்போது ஒரு கட்சி கேட்கும் தொகுதியை மற்றொரு கட்சியும் கேட்கக்கூடிய சூழல் இருப்பதால் தாமதம் இருக்கத்தான் செய்யும். எங்களுக்குள் எந்த இழுபறியும் இல்லை.

இன்று (28.3.2026) இரவு அல்லது நாளை (29.3.2026) காலை அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

புதுச்சேரியிலும் பானைச் சின்னம் ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, பானைச் சின்னத்தையும் ஒதுக்கவில்லை. சுயேட்சை சின்னத்திலேயே புதுச்சேரியில் போட்டியிட உள்ளார்கள்.

அதிமுக கூட்டணியில் உள்ள சின்ன, சின்ன கட்சிகளுக்கு நெருக்கடிகள் தருகிறார்கள். அங்கே தாமரையிலும் இரட்டை இலையிலும் நிற்க வேண்டும் என நெருக்கடியைத் தருகிறார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸுக்கு அய்ந்து இடங்களை கொடுத்துவிட்டு தாமரையில் நிற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அந்த மாதிரியான பிரச்சினைகள் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இழுபறி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.

பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது குறித்தான கேள்விக்கு, விஜய்க்கு அனுமதி வழங்குவது இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை எனத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *