சிதம்பரம் இரா.செல்வரத்தினம் இல்ல மணவிழா

1 Min Read

அரசியல்

சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் – இராசகுமாரி இணையரின் மகள் சுவேதாராணி மற்றும் கடலூர் மஞ்சக்குப்பம் சிவசோதி – வாசுகி இணையரின் மகன் சிவராம கிருஷ்ணனுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 27.3.2023  திங்கள்கிழமை திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலையேற்று, உரையாற்றினார்.

மணமக்களை வாழ்த்தி மணடலத் தலைவர் அரங்க.பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் கா.கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், மருத்துவர் முத்துக்குமரன், பொதுக்குழு உறுப்பினர் வ.பூ.அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இரா.செல்வரத்தினம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *