தஞ்சாவூர், மார்ச் 26– வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணி நிறுவனர் தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் 24.3.2026 அன்று நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணியின் செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் மேலும் தெரி வித்ததாவது:
இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களைவிட வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு நலன்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு, ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டின் மீது திணிக்கவும், தமிழ்த் தேசியம் உள்பட மொழிவழி தேசிய உணர்வுகளை அடக்கி ஒடுக்கவும் பா.ஜ.க. முற்படுகிறது. மேலும், இந்து மதவாத தேசியத்தைத் தூக்கிப் பிடிப்பதற்காக பா.ஜ.க. பல கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு களம் இறங்கியுள்ளது.
இந்தப் பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மை யான கடமை. இந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் நோக்கத்துடனும், ஜனநாயகக் கடமையை ஆற்றும் நோக்கத்துடனும் பா.ஜ.க. கூட்ட ணியை முறியடிக்கும் வகை யில் திமுக கூட்டணிக்கு ஆதரவ ளித்து வாக்களிக்கமுன் வருமாறு தமிழ்நாட்டு மக் களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் பழ.நெடுமாறன்.
