குமரி மாவட்டத்தில் தந்தை பெரியாருடைய நூல்கள் பரப்புரை

0 Min Read

அரசியல்

குமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய நூல்கள் மற்றும் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் பரப்புரை பணிகள் குமரி மாவட்டத்தில் முழுமையாக நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கொட்டாரத்தில் உள்ள தி.மு.க. ஒன்றிய செயலாளர் பா.பாபு, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்  பொறியா ளர் ஜானி ஆகியோரிடம் இயக்க நூல்களை வழங்கி கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பரப்புரை செய்தார். உடன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுசீந்திரம் மகாராஜன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *