முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – செங்கற்பட்டு மானமிகு இரா.கோவிந்தசாமி மறைந்தாரே!

1 Min Read

அரசியல்

காவல்துறையில் பணியாற்றிய, காலந்தொட்டு இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவரும், ஓய்வுக்குப் பிறகும் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியவரும், மாவட் டக் கழகத் துணைத் தலைவருமான முதுபெரும் பெரியார் பெருந் தொண் டர் மானமிகு இரா. கோவிந்தசாமி  (வயது 98) அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (8.4.2023) முற்பகல் 10.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது மறைவு அவர்தம் குடும்பத்திற்கு மட்டுமல்ல; கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

கருஞ்சட்டைத் தொண்டராகக் கடைசி மூச்சு அடங்கும் வரை வாழ்ந்து காட்டிய முதுபெரும் பெரியார் தொண்டருக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், மகன்கள் தமிழ்ச்செல்வன், இரவி ஆகியோருக்கும், கழகத் தோழர்களுக் கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம் 

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்துகின்றனர். 

தொடர்புக்கு: மகன் கோ. இரவி, செல்பேசி: 9380292500

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *