ரயில் ஓட்டுநர் 11,127 காலிப் பணியிடங்கள்

2 Min Read

இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் (RRB ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தமாக 11,127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்புடன் அய்டிஅய் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஊதியத்தை பொறுத்தவரை 63 ஆயிரம் வரை வழங்கப்படும்.

11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வே தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அறிவிப்பு ஒன்றை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ரயில்வே உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 11,127 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

கல்வித் தகுதி:

ரயில்வே லோகோ பைலட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ் காணும் கல்வித் தகுதியை பெற்று இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் அய்டிஅய் முடித்து இருக்க வேண்டும்.

அய்டிஅய்-யில் எலக்ட்ரீஷியன், மெக்கானிக் , எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மில் ரைட் / மெயிண்டனன்ஸ் மெக்கானிக், வைர்மேன், டிராக்டர் மெக்கானிக், ஆர்மேச்சர் & காயில் வைண்டர், மெக்கானிக், ரெஃப்ரிஜரேஷன் & ஏர் கண்டிஷனிங் மெக்கானிக், ஹீட் என்ஜின் (Heat Engine), டர்னர் மெஷினிஸ்ட் ஆகிய பிரிவுகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அல்லது 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என் ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை முடித்தவர்களை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பிரிவில் என்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்காலம்.

வயது வரம்பு:

உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை எப்படி?

தேர்வு முறையை பொறுத்தவரை சிபிடி எனப்படும் கணினி வழி தேர்வு நடைபெறும். சிபிடி 1, சிபிடி2 மற்றும் சிஏபிடி எனப்படும் கணினி அடிப்படையிலான அப்டிடியூட் தேர்வுக்குக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி/பெண்கள்/EBC/PwBD/ ம் – ரூ.250/- செலுத்த வேண்டும். தேர்வு எழுதியதும் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை விண்ணப்பிக்கலாம். www.rrbapply.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு மாதம் இருப்பதால் தேர்வர்கள் தற்போதே படிக்க தொடங்கினால் ரயில்வே உதவி லோகோ பைலட் வேலையைப் பெறலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *