அரசு மருத்துவமனைகளில் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

2 Min Read

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அரசியல்

கோவை,ஏப்.8- கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.

இதில், தமிழ்நாடு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கோவை ஆட்சியர் அலுவல கத்தில் இருந்தவாறு காணொலி வாயி லாக கலந்துகொண்டார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

ஆலோசனை கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து எடுத்துரைக்கப் பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி நிலவரப்படி கரோனாவுக்கு 273 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அப்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி, மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்வார்கள். பொதுசுகாதார துறை அமைப்பின் மூலம் கரோனா குறித்து ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோ தனை (ஆர்.டி.பி.சி.ஆர்.) செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று (நேற்று) நடந்த ஆலோசனை கூட்டத் தில் இந்தியா முழுவதும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத் தினர்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி கரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக அதிகரிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.

நாள்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இதய நோயாளிகள் ஆகியோர் பொது இடங் களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.

கரோனா பாதித்தவர்கள் 5-6 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் வீடுகளில் அறிவிக்கை ஒட்டப்படும். அவர்கள் தேவையில் லாமல் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக் கப்படுகிறது. பன்னாட்டு விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோ தனை செய்து வருகிறோம். அதை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப் படும். -இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *