சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்மணி அம்மாள் இல்ல மணவிழா

1 Min Read

அரசியல்

சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்மணி அம்மாள், செருநல்லூர் வி.கே. ராமு – வி.கே.ஆர். தனம் ஆகியோரின் பெயரனும்,   பெரியாரணி இயக்குநர் சி.காமராஜ் – சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு செவிலியர் கல்லூரி இணைப் பேராசிரியர் பெரியார் செல்வி இணையரின் மகன் பொறியாளர் கா. இளவல்,  உடையார்பாளையம் ஜெகநாதன் – சாரதாம்பாள்,  திருச்சி இராமலிங்கம் – சாரதம் ஆகியோரின் பெயர்த்தியும், ஜெ. பாண்டியன்  – இரா. ஜெயலட்சுமி இணையரின் மகள் பா. வினோதா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் குடும்பத்தினர். (பெரியார் திடல், 9.4.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *