நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் மார்ச் 23 முதல் நிரந்தரமாக மூடல் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.22  சென் னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலையங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முக்கிய நுழை வாயில்களில் ஒன்றான பி4 (B4) நுழைவாயில் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது.

பிஎஸ்என்எல் அலுவலகம் நோக்கிச் செல்லும் இந்த நுழை வாயில், உள்கட்டமைப்பு மேம் பாட்டுப் பணிகளுக்காக மூடப் படுவது அவசியம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (சி.எம்.ஆர்.எல்.) தெரிவித்துள்ளது. பி4 நுழைவாயில் மூடப்படுவதால் பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க, அதற்குப் பதிலாகப் பின் வரும் நுழைவாயில்களைப் பயன்படுத் துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதே திசையில் உள்ளவை: ஏ2 (A2) மற்றும் ஏ3 (A3) நுழைவாயில்கள். எதிர்புறத்தில் உள்ளவை: பி1 (B1), பி2 (B2) மற்றும் பி3 (B3) நுழைவாயில்கள். இந்த மாற்று நுழைவாயில்கள் அனைத்தும் அண்ணா சாலை யிலேயே அமைந்துள்ளதால், பயணிகள் எளிதாக நிலையத்திற்குள் நுழையவும் வெளியேறவும் முடியும். “இந்த மாற்றம் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நீண்ட கால அடிப்படையில் போக்குவரத்து இணைப்பு மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த உதவும். எதிர்காலத்தில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் புதிதாகத் திறக்கப்படவுள்ள நுழைவாயில் வழியாக, நந்தனம் மெட்ரோ நிலையத்திற்கான கூடுதல் அணுகல் வசதி பயணிகளுக்கு மீண்டும் கிடைக்கும்.” பயணிகளுக்கு வழிகாட்ட நிலைய வளாகத்தில் போதுமான அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல் அல்லது உதவி தேவைப்படும் பயணிகள் நிலையப் பணியாளர்களைத் தாராளமாக அணுகலாம் என மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *