ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 9.4.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* பிரதமர் கலந்து கொண்ட விழாவில் பேசிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியத்தில் உண்மை யான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறி ஞர் கலைஞர் அவர்களும் வலியுறுத்தி வந்தார்கள். எனவே மாநிலங்களின் நிதி தேவைகளையும், மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் திட்டங்களை நிறை வேற்றவும் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு மிகமிக தேவை என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை (என்சிஇஆர்டி) அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளு டன் மறுசீரமைக்க வேண்டும் என்றும், சில பகுதிகளை நீக்கும் என்சிஇஆர்டியின் நடவடிக்கையை கேரளா ஏற்க முடியாது என்றும் “சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் வரலாற்றின் சில பகுதிகளை (பாடப்புத்தகங்களிலிருந்து) நீக்கியதை கேரளா ஏற்க முடியாது. மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிரான எந்த முடிவையும் ஏற்க மாட்டோம்,”என கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *