மீன்சுருட்டியில் நடைபெற்ற ‘தி.மு.க. வெல்லட்டும்’ தெருமுனைக் கூட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மீன்சுருட்டி, மார்ச் 20-   “திமுக வெல்லட்டும்”… திராவிட மாடல் தொடரட்டும்… என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மீன்சுருட்டி கடைவீதியில் 14.3.2026 அன்று மாலை 6 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரதலைவர் பெரியார் பெருந்தொண்டர் அ.சேக்கிழார் தலைமை யேற்க, மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் வரவேற்புரையாற்றினார்.

கழகப் பொதுக்குழு உறுப்பினர் ராஜா. அசோகன், மாவட்ட தொழிலாளரணி துணைத் தலைவர் மா.கருணாநிதி, சம்போடை ராஜேந்திரன், மீன்சுருட்டி த.ராஜேந்திரன் வாழைகுட்டை கு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காப்பாளர் சி.காமராஜ், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன்,  மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள் வ.உ.சியின் தியாகம், தமிழ் மக்களின் வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்கையும், திமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஆ. இளவழகன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சி.சிவக் கொழுந்து, செந்துறை ஒன்றியத் தலைவர் மு. முத்தமிழ்ச்செல்வன் தா.பழூர் ஒன்றிய துணைச் செயலாளர்
சி.தமிழ் சேகரன் தா.பழூர், ஒன்றிய துணைத் தலைவர் ஆசிரியர் இராஜேந்திரன், கீழப்பழுவூர் கே.எம். அன்பரசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் தியாக. முருகன், துணைச் செயலாளர்த.கு.பன்னீர்செல்வம் வடலூர் வசந்த், காட்டுமன்னார்குடி ஒன்றியத் தலைவர் பொன். பஞ்சநாதன் ஒன்றிய செயலாளர் அறந்தாங்கி செல்வ கணபதி உள்ளிட்ட பொறுப்பாளர்களும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *