இனிப்புகள் தயாரிப்பின் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டது

Viduthalai
2 Min Read

சென்னை, நவ. 5 – இனிப்புகள் தயாரிக்கும்போது பின் பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விட யங்கள் குறித்த விழிப்பு ணர்வை தமிழ்நாடு அர சின் உணவு பாதுகாப்புத் துறை முன்னெடுத்து வரு கிறது. 

உணவு பாதுகாப்புத் துறை முன்னெடுத்து வரு கிறது. உணவு பாதுகாப் புத்துறை நியமன அதி காரி சதீஷ்குமார் தலை மையில் என்.ராஜா உள் ளடங்கிய குழுவினர் பங் கேற்று பல்வேறு அறிவு ரைகளை வழங்கினர். அந்த அறிவுரைகள் வரு மாறு:-

செயற்கை நிறமூட்டிகள் கூடாது 

* உணவு வணிகர்கள் தங்களது உணவு பாது காப்பு உரிமத்தை காட்சிக்கு வைத்திருக்க வேண்டும். 

* உணவு தயாரிக்கும் இடத்தில் போதிய வெளிச்சம் இருக்கவேண் டும். சுவர்களில் கரி படிந் திருக்கக்கூடாது. 

* பூச்சிகள், எலிகளின் நடமாட்டம் இருக்கக் கூடாது. 

* பொட்டலமிடப் பட்ட எண்ணெய் மட் டுமே பயன்படுத்த வேண் டும். ஒருமுறை மட்டுமே அந்த எண்ணெயை பயன்படுத்தவேண்டும். 

* இனிப்பு, கார வகை களில் இயற்கை வண்ணங் கள் சேர்க்கலாம். அனு மதிக்கப்பட்ட வண்ணங் கள் 100 பி.பி.எம். அளவில் சேர்க்கலாம். 

* செயற்கை நிறமூட்டி கள் சேர்க்க கூடாது.

* பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தர நிர்ணய அளவு நீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பைகள் கூடாது 

* பணியாளர்கள் கைக ளில் நகங்களுடன், முழு சீருடையற்ற வகையில் இருக்க கூடாது. கையுறை, தலையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும். 

* நோயால் பாதிக்கப் பட்டவர்களை பணியாற்ற அனுமதிக்க கூடாது. 

* பேக்கிங் செய்யப் பட்ட உணவு பொட்ட லங்கள் மீது உணவு பொருளின் விவரம் அச் சிடப்பட்டிருக்க வேண் டும். தயாரிப்பு, காலாவதி விவரங்கள் இருக்க வேண்டும்.  

* பால் பொருட்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுடன், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்படும் பொருட்களை சேர்த்து பொட்டலமிட்டு விற் பனை செய்யக்கூடாது. 

* உணவு பொருட்கள், எண்ணெய் பலகாரங்கள் பரிமாறும்போது இலை அல்லது தட்டுகள் பயன் படுத்த வேண்டும். தாள் கள், பிளாஸ்டிக் பைக ளில் கொடுக்கக்கூடாது.இவ்வாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “உணவு பாதுகாப்பு துறை யிடம் உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு வழி முறைகளுடன் இனிப்பு கள் தயாரிக்கலாம். ஆனால் சிலர் மண்டபங் களை வாடகைக்கு பிடித்து விழாக் காலங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்ப தாக அறிகிறோம். அவர் கள் தங்கள் விவரங்களை கொடுத்து தற்காலிக உரிமம் பெறலாம். அதை விடுத்து பாதுகாப்பின்றி, சுகாதாரமின்றி இனிப்பு-கார வகைகள் தயாரித் தால் சட்டப்படி நடவ டிக்கை எடுப்போம். மேற் கண்ட அறிவுரைகளை மீறும் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்படும். 

இதுபொதுமக்கள் நலன் சார்ந்த விடயம் என்பதால் மிகவும் எச்ச ரிக்கையாக இருக்கிறோம். தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ள உள் ளோம். பொதுமக்களும் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்”, என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *