குண்டூர் நகரில் பிரபல குழந்தைகள் நல மருத்துர் ஆலா வெங்கடேஸ்வரலு பெரியார் திடலுக்கு வருகை

1 Min Read

அரசியல்

ஆந்திர மாநிலம் – குண்டூரில் பி.பி. மண்டல் சிலை அமைத்த குழுவின் செயலாளரும், குண்டூர் நகரில் பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு திருச்சி – பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனங்கள் – தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் – பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றைப் பார்வையிட்டபின் 7.4.2023 அன்று சென்னை – பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். டாக்டர்  வெங்கடேசுவரலு பெரியார் திடலுக்கு வருகை தந்த பொழுது தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். உடன் வருகை தந்த கேசவலு (ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர், தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை) அவர்களுக்கும் சிறப்பு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *