மதமாற்றம் என்ற பெயரில் பிஜேபி அராஜகம்!

Viduthalai
3 Min Read

புதுடில்லி, ஏப். 10- 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த  பின்பு ஒவ்வொரு நாளும் சிறும்பான்மையினர், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்மீது பாஜக – ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக 2024 மக்களவைத் தேர் தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்கொள்ளவிருக்கும் மாநிலங்களில் இந்துத்துவா குண்டர்கள் சமீபகாலமாக அதிகளவில் முஸ்லீம் மக்கள்மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கருநாடகா, மகாராட்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ் லீம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக் கள் மீது வன்முறைகளை அரங்கேற்றி அவர்களது சொத்துக்களை சூறையாடியுள்ளனர்.  

இந்நிலையில், மதமாற்றம் செய் கிறார்கள் என்று கூறி கிறிஸ்தவர்களின் மீதும் ஹிந்துத்துவா குண்டர்கள் தாக் குதலை தொடங்கியுள்ளனர். கிறிஸ்த வர்களின் மீதான இந்துத்துவா அமைப் பினரின் தாக்குதல் நடைபெறுவது ஏற் கெனவே இருந்தது, சமீபகாலமாக மிகமோசமான அளவில் அதிகரித்து வருகிறது. தேவாலயங்கள் மீது கற்களை வீசுதல், தீ வைத்தல், அமைதியாக நடை பெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் புகுந்து மதமாற்றம் நடைபெறுகிறது எனக் கூறி பாதிரியார் கள், கிறிஸ்தவ மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துதல்,  பாதிரியார்களை காவல்துறையின் உதவியுடன் கைது செய்தல் ஆகியவை நடந்து வருகின்றது. இதனால் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு பொழுதையும் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். 

மத்தியப் பிரதேசம்  

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அமைதியாக பிரார்த்தனை நடைபெற்ற ஒரு வீட்டிற்குள் இந்துத் துவா குண்டர்கள் நுழைந்து வன் முறையை கட்ட விழ்த்துவிட்டுள்ளனர்.  பிரார்த்தனையில் இருந்த கிறிஸ்தவ மக்கள், மீது தாக்குதல் நடத்தி நாற் காலிகள் மற்றும் இசைக்கருவிகளை உடைத்து நொறுக்கினர்.

உத்தரப்பிரதேசம் 

பாஜக ஆளும் மற்றொரு மாநில மான உத்தரப்பிரதேசத்தின் காஜிபூரில் பாஜக தலைவர் யோகேஷ் சிங் தலை மையிலான ஹிந்துத்துவா குண்டர்கள் மாநில காவல்துறையின் உதவியுடன் பிரார்த்தனை கூட்டத்திற்குள் புகுந்து இடையூறு செய்துள்ளனர்.  மேலும்  மதமாற்றம் செய்ததாக காவல்துறை யில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இதேபோல ராய்பரேலி பகுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தி னுள்ளும் புகுந்த பாஜக குண் டர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பின்னர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக காவல் துறைக்கு புகார் அளித்தனர். நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிறிஸ்தவர்கள் பலரை கைது செய்து உள்ளனர். 

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜா ரில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் துர்கேஷ் தேவாங்கன் என்ற  நபர் கிறிஸ்தவ விரோத வெறுப்பு உரையை நிகழ்த்தினார். உரையில், “பொருளாதாரத்தில் நலிவடைந்தவர் களை சாதகமாக பயன்படுத்தி, அவர் களை முட்டாளாக்கி மத மாற்றம் செய்யும் மிஷனரிகள், பாதிரி யார்களை கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க அனைவரும் தயாராக வேண்டும். முக் கியமாக பாதிரியார்கள் கிராமங்களுக் குள் நுழைவதைத் தடை செய்ய வேண் டும் எனவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் ஊக்குவிக்கப்பட எனவும்” வெறித்தனமாகப் பேசினார். மேலும் வன்முறையைத் தூண்டும் முழக்கத்தையும் எழுப்பினார். “பெஹ்லே ரோகோ, ஃபிர் டோகோ, அவுர் நஹி சுனே தோ தோகோ (முதலில் அவர் களை நிறுத்துங்கள், பின்னர் திட்டுங் கள், அவர்கள் கேட்க வில்லை என்றால் அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்)” என மதவெறியுடன் கூவினார். 

கண்டு கொள்ளாத காவல்துறை

பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தொடுக்கும் ஹிந்துத்துவா குண்டர்கள் மீது வழக்குத் தொடர காவல்துறை அதி காரிகள் தயாராக இல்லை. உண்மையில் ஆளும் பாஜக அரசின் ஆதரவு, காவல்துறை உதவியுடனேயே  கிறிஸ்த வர்களுக்கு எதிராக தாக்குதல் அரங் கேறி வருகிறது. அத்துடன் பாஜக ஆளும் மாநிலங்களில் பாதிரியார்கள் தேவாலயத்திற்குள் நுழைவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் கட்டுப் பாடுகளை காவல்துறையினர் விதித்து உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *