சி.ஆர்.பி.எஃப். பணிக்கான தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்

Viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் 

சென்னை, ஏப்.10 சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (9.4.2023) அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் (சிஆர்பிஎஃப்) 9,212 காவலர்கள் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின் 8-ஆவது அட்டவணை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித் துள்ளது.

ஆனால், சிஆர்பிஎஃப் ஆள்சேர்க்கைக்கான கணினி தேர்வு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு இளைஞர்களிடம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

சிஆர்பிஎஃப் அறிவிக்கையின்படி, மொத்தம் 9,212 காலி பணியிடங்களில், 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 12 மய்யங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தம் 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் ஹிந்தி மொழி அடிப்படை புரி தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வு இந்தி பேசுவோருக்கே சாதகமாக உள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு எதிரானது. இது தன்னிச்சையானது மட்டுமின்றி, பாகுபாடு காட்டக் கூடியதும் ஆகும். அவர்கள் துணை ராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பையும் இத்தேர்வு பறிக்கிறது.

ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே கணினி தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசமைப்பு வழங்கி யுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, தாங்கள் இதில் உடனே தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர் பிஎஃப்-பில் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகை யில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இத்தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற் றம் செய்ய சிஆர்பிஎஃப் அதிகாரிகளை அறிவுறுத் துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *