எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மாநில அரசு அனுமதி

1 Min Read

சென்னை, ஏப். 10- தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

கடந்த 2017 முதல் 2021 வரை  தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் என 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் ரூ. 4,080 கோடியில் அமைக்கப்பட்டன. அதில்  முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி கட்டுமான ஒப்பந்தப்புள்ளிகளில் முறை கேடு செய்ததாக புகார் எழுந்தது. முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து  லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை  நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. எனினும் இது விசாரணைக்கு மட்டுமான அனுமதிதான் என்றும் தேவைப்பட்டால் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *