திராவிடத்தின் வேரறுக்க
திட்டமிடும் ஆரியத்திற்கு
குரல்வளையில் சுருக்கேற்றி
திராவிடர்க்கு வாழ்வளித்த
அறிவாசான் பெரியாரின்
திராவிடர் கழகத்திற்கு
தமிழர் தலைவர்
மானமிகு ஆசிரியர்
தலைமைப் பொறுப்பேற்று
நாற்பத்து ஒன்பதாண்டு
அடுத்தாண்டு அய்ம்பதாண்டு
தலைமைப் பொறுப்பிற்கு
பொன்விழா ஆண்டு

அய்யாவின் இயக்கத்தில்
அடியெடுத்து வைத்து
எண்பத்து மூன்றாண்டு
இன்று பயணிப்பது
தொன்னூற்று மூன்றாமாண்டு
தமிழர் தலைவர்
தலைமை ஏற்றபின்
பகுத்தறிவுமேதை பெரியார்
பன்னாடு பயணித்தார்
சட்டங்களில் இடம்பிடித்தார்
ஆல்ப்ஸ் மலையில்
எதிர் ஒலித்தார்
ஆக்ஸ்போர்டில் அலங்கரித்தார்
அய்நாமன்றத்தார் ஆய்வுசெய்தார்

அழியாப்புகழ் சான்றளித்தார்
மண்டல் பரிந்துரைக்கு
உயிர் கொடுத்தார்
மகளிர் உரிமைக்கு
மாநிலத்தில் இடமளித்தார்
சமூகநீதிக்கு சமர்புரிந்தார்
சர்க்காருக்கு சமூகநீதிக்கான
சட்டத்தையே வரைந்தளித்தார்
அனைவரும் அர்ச்சகராக
அனுதினமும் உழைக்கிறார்
ஆரிய இனத்தார்
அனலாக துடிக்கிறார்
திராவிடர் மாடலாட்சி
திராவிடத்தில் தமிழராட்சி
மீண்டும் மலர்ந்திட
தேர்தல் பிரச்சாரத்தில்
மாநிலத்தை வலம்வந்து
நாட்டைக் குலுக்கிட
நாள்குறித்து காத்திருக்கிறார்
தி.மு.க.அணி வெற்றிபெற்று
திராவிடர் ஆட்சியமையும்
தலைமைப் பொறுப்பேற்ற
பொன்விழா ஆண்டில்
திராவிட மாடலாட்சி
நாட்டுக்கே மாடலாக
வரலாற்றில் மிளிரும்
வைரக்கல்வெட்டாய் ஒளிரும்!
தமிழர்தலைவர் தலைமையில்
பெரியார்உலகம் அமையும்!
– முனைவர் க.அன்பழகன்

