சென்னை, மார்ச் 18- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுடன் இணைத்து நடத்தக் கோரித் தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
இதுதொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்தல்கள் பெரும்பாலும் ஒரே நாளில் நடத்தப்பட்டு வந்துள்ளன. இந்த அணுகுமுறையிலிருந்து விலகுவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
தற்போதைய புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜூன் 15 வரை நீடிக்கும். இப்படியிருக்க, தேர்தலை அட்ட வணையை முன்னிட்டு நடத்துவதில் உள்ள அவசரத்தை விளக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், 28 தொகுதிகள் புவியியல் ரீதியாக தமிழ்நாட்டுக்குள் அமைந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இரண்டு வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடத்துவது பிரச்சாரம், வெளிநாட்கள் நட மாட்டம், வாக்காளர் ஆள்மாறாட்ட அபாயங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட சவால்களை உருவாக்கக்கூடும்.
எனவே, புதுச்சேரி வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி இணைத்து நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் வேலை நாளாக வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி புதுச்சேரி வாக்குப்பதிவு நடத்தினால், இங்கிருந்து தமிழ்நாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், வேட்பு மனு செயல்முறைக்கு நியாயமான கால அட்டவணையை தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

