சென்னை, மார்ச் 17– சென்னை உட்பட காஞ்சிபுரம், சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மண்டலங்களில் சங்கமம் விழா நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2026ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கலை பண்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான artandculture.tn.gov.in என்பதில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதி கலை பண்பாட்டுத் துறை மண்டல அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
கலைக்குழுக்கள் தங்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் 5 நிமிட காட்சிப் பதிவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மண்டல அளவிலான தேர்வு: கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவினர், தகுதியான குழுக்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
மாநில அளவிலான வாய்ப்பு: முதற்கட்டமாக மற்ற மாவட்டங்களில் நடக்கும் விழாக்களில் இக்குழுக்கள் பங்கேற்பர். அதில் சிறப்பாகச் செயல்படும் குழுக்கள், மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, 2027-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்கப் பரிந்துரைக்கப்படுவர்.
தமிழ்நாட்டின் கலை நயத்தைப் பறைசாற்றக் காத்திருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
