பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் நாள் கொண்டாட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, மார்ச் 17- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் நாள் 13.03.2026 அன்று மாலை 4 மணியளவில் கொண்டாடப்பட்டது. இவ் விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையேற்று உரையாற்றினார்.

நலவாழ்வுத் துறையில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது என்றும் அவர்களின் பரிசோதனை முடிவுகளைக் கொண்டே நோய்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன் தொடர்ந்து சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன என்றும் உரையாற்றினார்.

தொழில்நுட்பனர்களின் சிறிய கவனக்குறைவும் மிகப் பெரிய ஆபத்தை மருத்துவப் பயனாளிகளுக்கு விளைவிக்கும் என்றும் ஆகையால் பொறுப்புணர் வுடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் தந்தை பெரியார் காட்டிய மனித நேயத்துடன் கடமையாற்ற வேண்டும் என்றும் உரையாற்றினார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

சுய பாதுகாப்பை
உறுதி செய்ய வேண்டும்

டிஜிட்டல் முறையில் தற்போது சில நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை கண்டறியும் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சுய பாதுகாப்பை ஒவ்வொரு மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கான பாதுகாப்பு உத்திகளை யும் பரிசோதனைகளை மேற் கொள்ளும்போது கையாள வேண்டும் என்றும் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி தமது வாழ்த்துரையில் மருத்துவத் துறையில் வெளியில் தெரியாத ஆனால் மக்களின் சிகிச்சைக்கு மிக முக்கிய காரணமாக திகழக் கூடியவர்கள் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பனர்கள் என்றும் வளர்ந்து வரும் ஆய்வுக்கூட தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்திருப்பதும் இன்றைய முக்கியத் தேவை என்றும் உரையாற்றினார்.

பட்டயப்படிப்பின் முதன்மையர் பேராசிரியர் கு. சக்திவேல், மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி மற்றும் மருந்தியல் பயிற்சித் துறை பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஆய்வுக் கூட தொழில்நுட்பனர் துறை மாணவி வி. பெசிக்கா ஜில்ஸ் உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக மாணவி கே. நூருல் ஜன்னத் அனைவரையும் வரவேற்றார். மாணவி கே. புவனா நன்றி கூறினார். மாணவிகள் ஆர்.கே. பவ பிரியா மற்றும் என். கிருபா கின்சியா ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *