சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரலில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில பேரவை களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக 23.4.2026இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.
இந்நிலையில், மேற் கண்ட 5 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய தகுதிவாய்ந்த ஒட்டுமொத்த வாக்காளர் கள் எண்ணிக்கையானது ஒப்பீட்டளவில் சுமார் 5 நாடுகளில் உள்ள மொத்த மக்கள்தொகைக்கு இணையான அளவில் இருப்பது சுவாரசிய தகவலாக உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்
புதுச்சேரியில் மொத்தம் 9.44 லட்சம்
மேற்கு வங்கத்தில் மொத்தம் 6.44 கோடி
கேரளத்தில் மொத்தம் 2.70 கோடி
அசாமில் மொத்தம் 2.50 கோடி என ஒட்டு மொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.
தேர்தல் ஆணைய தகவலின்படி, மேற்கண்ட 5 மாநில ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண் ணிக்கை, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள்தொகைக்கு இணையாக உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
