வடக்குத்து அண்ணா கிராமத்தில் தொண்டறத்தாய் மணியம்மையார் நினைவு போற்றும் நிகழ்வும் உலக மகளிர் நாள் விழாவும்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வடக்குத்து, மார்ச் 17- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் அன்னை மணியம்மையார் நினைவு போற்றும் நிகழ்வும் உலக மகளிர் நாள் விழாவும் மாவட்ட மகளிர் அணித் தலைவர் முனியம்மாள் தலைமையில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை நிர்வாகிகள் குணசுந்தரி தமிழேந்தி சத்தியவதி ஆகியோர் முன்னிலையில்15.3.2026 அன்று நடைபெற்றது.

வடக்குத்து மகளிர் அணித் தலைவர் விஜயா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் பங்கேற்ற மகளிர் அணி கிளைக் கழக பொறுப் பாளர்கள் வடலூர் கலைச்செல்வி, மருவாய் கலைச்செல்வி, வேகாக் கொல்லை மங்கலட்சுமி, அப்பியம் பேட்டை மலர், வேகாக் கொல்லை தமிழ்மணி, வடலூர் செல்வராணி, அப்பியம்பேட்டை தேவிகா, வடக் குத்து கீதா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

கடலூர் மாவட்ட தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் குழந்தை வேலன் தொடக்க உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உலக மகளிர் நாள் வரலாறு மற்றும் நோக்கம் குறித்தும் அன்னை மணியம்மையாரின் தொண்டறம் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் சுசீத்ரா பெண்கள் முன்னேற்றம் மற்றும் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் தொண்டறம் குறித்து சிறப்புரையாற்றினார்.

மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட துணைத்தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், குறிஞ்சிப்பாடி கழகத் தலைவர் கனகராசு, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வடக்குத்து கிளைக் கழக தலைவர் பாஸ்கர், செயலாளர் கண்ணன், வடலூர் கழக செயலாளர் குணசேகரன், அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடலூர் நகர அமைப்பாளர் முருகன், மருவாய் சேகர் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் திராவிட மணி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *