இது ஒரு தினமலர் செய்தி கட்சி மேலிடம் தேர்தல் செலவிற்காக கொடுத்த 11 கோடி ஸ்வாகா!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் 22,000 தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்த கொடுக்கப்பட்ட 11 கோடி ரூபாயை, தமிழ்நாடு பா.ஜ.,வினர் முழுமையாக பயன்படுத்த வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வரும் ஏப்ரல் 23இல் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., பல்வேறு வியூகங்களை வகுத் துள்ளது.

சக்தி கேந்திரம்

கடந்த 12 ஆண்டு கால மோடி ஆட்சியின் சாதனைகள், குறிப்பாக தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்ட மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பா.ஜ., முடிவு செய்தது.

மூன்று அல்லது நான்கு ஓட்டுச்சாவடிகளை, ‘சக்தி கேந்திரம்’ என பா.ஜ., வரையறுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 22,000 சக்தி கேந்திரங்களிலும், ‘நாளை நமதே; தமிழ்நாடும் நமதே’ என்ற முழக்கத்துடன் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்த பா.ஜ., தலைமை உத்தரவிட்டது.

இதற்கான ஏற்பாடுகள் செய்ய, ஒரு தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு 5,000 ரூபாய் வீதம், 22,000 கூட்டங்கள் நடத்த, 11 கோடி ரூபாயை பா.ஜ., மேலிடம் வழங்கியது. ஆனால் திட்டமிட்டபடி 22,000 சக்திக் கேந்திரங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடக்கவில்லை என்றும், ஏற்பாடு செய்த இடங்களிலும் சரியாக நடத்தவில்லை என்றும், நிர்வாகிகள் ஆதாரங்களுடன் மேலிடத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

விசாரணை ‘டீம்’

மேலிடம் கொடுத்த 11 கோடி ரூபாயை முழுமையாக பா.ஜ., நிர்வாகிகள் செலவழிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதை விசாரித்த பா.ஜ., மேலிடம், தெருமுனை பிரசார கூட்ட செலவுகளுக்கான 5,000 ரூபாயை, சக்தி கேந்திர பொறுப்பாளரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்துமாறு உத்தர விட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான கூட்டங் களை முடித்து விட்டதாக, மேலிடத்திற்கு தமிழ்நாடு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தமிழ்நாடு பா.ஜ., நிர்வாகிகள் மீது, தேசியத் தலைவர் நிதின் நபின் அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, டில்லி பா.ஜ., தலைமையில் இருந்து விசாரணைக்காக, தமிழ்நாட்டுக்கு ஒரு டீம் அனுப்பி வைக்கப் படும் என பா.ஜ.,வினர் தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *