அன்னை மணியம்மையார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கல்லடி – சொல்லடி – சிறைவாசம் எதுவரினும்

கலங்காது முழங்கிநின்ற வேங்கையொன்றுக் கண்டோம்!

பெரியாரெனும் பெருந்தீ – அணையாது காத்த

தாய்ப்புலியொன்றை பெருவியப்புடன் கண்டோம்!

இராவணன் உருவத்தைக் கொளுத்தி

தமிழினப் பகைவர் – ஸநாதன இனவெறியர்

தமிழரை இழிவுசெய்வதைக் கண்டு

மனிதநேயத் தீரத்துடன் – தன்மான எழுச்சியுடன்

இராமனையும் – பாசிச இனவெறியையும்

கொளுத்திய அறச்சீற்றதைக் கண்டோம்!

ஆணாதிக்கத்தின் ஏச்சுப் பேச்சுகளை குப்பையிலே

தூக்கியெறிந்து – களத்திலே சமுதாய விடுதலைக்காக

நின்ற பெண்ணியச் சுடரொளியைக் கண்டோம்!

டெல்லி ஏகாதிபத்தியத்தை ஒவ்வொரு நொடியும்

அலறவிட்ட அரிமாவைக் கண்டோம்!

எளிமையெனும் பண்புக்கு உருவகமாய் உருவெடுத்த

கருஞ்சேலை வேங்கையினைக் கண்டோம்!

ஸநாதன இருள்ஒழித்து – செம்பொதுமைப் புத்துலகு

படைக்கும் இலட்சியச் சுடரினைக் கண்டோம்!

நெருக்கடி நிலை நெருப்பாற்றிலே

டெல்லிக்கு சிம்ம

சொப்பனமாய் நின்ற

சிறைக்கஞ்சாத சிங்கத்தை –

வீரத்தின் விளைநிலத்தை

வியப்புடன் கண்டோமே!!

இத்துணையும் – இன்னும் பலவற்றினையும்

தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர்

தோழர் மணியம்மை யென்றுரைத்தோம்!

மனிதகுல விடுதலைக்குப் போராடும்

தோழர்கள் யாவருக்கும் அன்னை

எம் மணியம்மையார்…

வாழ்நாள் ஒவ்வொன்றிலும் – ஒவ்வொரு

நொடியிலும் – மணியம்மையாரே!

உம்மை இதயத்திலேந்துவோம்!!

அன்னையே – உங்கள் நினைவையும் –

வரலாற்றையும் என்றும் மறவோம்!

உங்கள் இலட்சியத்தை நிச்சயம் வென்றெடுப்போம்!

சமத்துவ உலகினைப் படைத்திடுவோம்!!

நிச்சயம் – நிச்சயம் – நிச்சயம்!!!

– த.யு.கதிரவன்
(பத்தாம் வகுப்பு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *