வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

Viduthalai
1 Min Read

தேனி, நவ. 5- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சி யின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (4.11.2023) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, வைகை கரையோர மக்க ளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது. தேனி மாவட் டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணை யின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *