திராவிட மாணவர் சந்திப்பு

1 Min Read

அரசியல்

பழனி, ஏப். 11- பழனி கழக மாவட்டம் சார்பில் ஒட்டன்சத்திரம் நகரத்தில் 9-.4.-23 அன்று காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட மாணவர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர் களின் தனித்திறமையைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு பூவரசன் தலை மையேற்றார்.ஒட்டன்சத்திர நகரத் தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன், நகர இளைஞரனித் தலைவர்  சம் பத் உள்ளிட்ட கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, பழனி மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார்,  புலவர் வீரகலாநிதி, பழனி நகரச் செய லாளர் சி.இராதாகிருட்டிணன், பழனி ஒன்றியத் தலைவர் மதண பூபதி, தி.முக பொறுப்பாளர் மோகன் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் மாணவர்களுக்கு வழி காட்டுதல் உரை வழங்கினர். திண்டுக்கல் மண்டலத் தலைவர் நாகராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆனந்தமுனிராசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினர். 

இந்நிகழ்வின் நோக்கம் குறித்து திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டியன் நோக்கவுரையாற் றினார். 

இறுதியில் புருஸ் பெரியார் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *