கனியம்மாள் மறைவு – உடற்கொடை அளிப்பு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

அரசியல்

தென்காசி, ஏப். 11- நேற்று (10.4.23) தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் தந்தை பெரியார் குருதி,விழி, மற்றும் உடற்கொடை கழக நிறுவனரும், நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளருமான அய்.இராமச்சந்திரனின் தாயாரும், மருத்துவர் உ.இரா.மானவீரனின் பாட்டியுமான மறைவுற்ற அய்.கனியம்மாள் அவர்களின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட கழக தலைவர் இரா.காசி, நெல்லை மாவட்ட கழக துணைத்தலைவர் ச.இராசேந்திரன் நெல்லை மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன் சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் சேகர், ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் நெல்லை மாவட்ட தி.க மகளிரணி தலைவர் இரா.பானுமதி தந்தை பெரியார் குருதி,விழி, மற்றும் உடற்கொடை கழக பொருளாளர் த.அசோக், தந்தை பெரியார் குருதி,விழி, மற்றும் உடற்கொடை கழக  செயலாளர் அ.வ.சவுந்தரபாண்டியன், மருத்துவ மாணவர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *