ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று மாலை 5 மணியளவில் மணமேல்குடியில் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி கடைவீதி வசூல் பிரச்சாரத்தில் கழகத்தோழர்கள் ஈடுபட்டனர். அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு வணிகப் பெருமக்கள் மாநாட்டுக்கு நன்கொடையை மகிழ்வுடன் வழங்கினர் உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மணமேல்குடிஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ.யோவான்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் அ.சரவணன், மண்டல இளைஞ ரணி செயலாளர் க. வீரையா, மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராசா, பீ.அறிவுச் செல்வன், விமல்ராஜ், ஆகாஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன் ஆகியோர்.
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் – பிரச்சாரம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
