இங்கு ஜாதிகள் இல்லை-ஏழைகள் மட்டுமே என்று கூறும் மோடி தன்னை ஏன் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரன் என்று அடையாளப்படுத்துகிறார் – ராகுல் கேள்வி

1 Min Read

அரசியல்

ராய்ப்பூர், நவ. 5- பழங்குடியினரை ‘ஆதிவாசி’ என்று குறிப்பிடாமல் ‘வனவாசி’ என்று குறிப்பிட்டு பழங்குடியினரை பாஜக அவமதிப்பதாக மேனாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் ஆதிவாசிகள் தான் நாட்டின் உண்மை யான உரிமையாளர்கள் என்பதால் அவ்வாறு அழைத்தால் அவர்களின் நிலம், நீர், காடுகளை திரும்ப வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை சாடி வரும் பிரதமர் மோடி, நாட்டில் ஏழைகள் என்ற ஒரேயொரு ஜாதி மட் டுமே இருப்பதாக கூறி வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

இதுதொடர்பாக சத் தீஷ்காரின் ஜக்தால்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “ஏழைகள் மட் டுமே நாட்டின் ஒரே யொரு ஜாதி என பிரதமர் மோடி கூறுகிறார். 

ஆனால் தாழ்த்தப்பட் டோர், ஆதிவாசி, பிற் படுத்தப்பட்டவர்கள் போன்ற ஜாதிகள் இருப் பது நமக்கு எல்லாம் தெரியும். நாட்டில் ஒரே யொரு ஜாதிதான் இருந் தால், பிரதமர் ஏன் தன்னை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓ.பி.சி) சேர்ந்த வர் என அடையாளப்ப டுத்துகிறார்?’ என கேள்வி எழுப்பினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *