போக்சோ சிறப்பு நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்கள் அமைக்கப்படும்

Viduthalai
2 Min Read

சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு 

அரசியல்

சென்னை, ஏப்.11- தமிழ் நாடு சட்டப்பேரவையில் நேற்று (10.4.2023) நீதி நிர்வாகம் மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் பேசினர்.

அவர்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: 

தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 1,330 நீதிமன் றங்கள் இயங்கி வருகின் றன. மொத்தம் 45 மாவட்ட நீதிபதி பணியி டங்களை சென்னை உயர் நீதிமன்றம் வாயிலா கவும், 245 சிவில் நீதிபதி பணியிடங்களை டிஎன் பிஎஸ்சி மூலமாகவும் நிரப்ப நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

அரசு சட்டக் கல்லூரி களில் 18ஆயிரம் இடங் கள் உள்ளன. அவற்றில் 1,200 இடங்கள் நிரம்ப வில்லை. எனவே புதிதாக அரசு  சட்டக்  கல்லூரிகள் தொடங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசி னார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

திருநெல்வேலியில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் பதிவு செய்யப்படும் வழக்கு களை விசாரிக்க கூடுத லாக ஒரு சிறப்பு நீதிமன் றம், திருவண்ணா மலை மாவட்டம் செய் யாறில் கூடுதலாக ஒரு சார்பு நீதிமன்றம், விழுப் பு ரத்தில் ஒரு மாவட்ட உரி மையியல் நீதிமன்றமும், ஒரு குற்ற வியல் நடுவர் நீதிமன்றம், வேலூர் மாவட்டம் அரக்கோ ணத்தில் ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.

நீதிபதிகளின் பயன்பாட்டுக்காக ரூ.10.71 கோடி செலவில் 818 மடிக் கணினிகள், லேசர் பிரின் டர்கள் வாங்கப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், எழுத் தர்கள், பொது மக்களின் வசதிக்காகரூ.2 கோடி யில் மின்னணுக் காட்சிப் பலகைகள் (டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு) நிறு வப்படும்.

கிருஷ்ணகிரி, திருப் பூர் மாவட்டங்களில் தலா  ஓர் உதவி இயக்குநர் மற்றும் தேவையான பணியிடங்களுடன் குற்ற வழக்கு தொடர்புத் துறை உதவி இயக்குநர் அலுவல கம் ஏற்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள 1008 சார்நிலை நீதிமன் றங்களுக்கு, ரூ.80 கோடி யில் 2 கட்டங்களாக கணினி மற்றும் இதர உபகரணங்கள் வாங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *