தெற்குநத்தம், ஏப்.12- திராவிடர் கழகத் தோழர், ‘மாலை தமிழகம்’ செய்தியாளர் மறைந்த சுயமரியாதை தெற்கு நத்தம் சசி குமார் அவர்களின் படத்திறப்பு நினைவேந் தல் நிகழ்ச்சி 6.4.2023 அன்று உரத்தநாடு ஒன்றியம் தெற்குநத்தத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன் கலந்துகொண்ட அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், உரத்த நாடு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை என். இரமேஷ், தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ரெ.பா.தமிழ்நேசன், கழக மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், ஆகியோர் கலந்துகொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.
மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையேற்றும், மறைந்த சுயமரியாதைச் சுடரொளி தெற்கு நத்தம் க.சசிக்குமார் அவர்களின் இயக்க செயல்பாடுகளை எடுத்துக்கூறி நினைவேந் தல் உரையாற்றினர். தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங் படத்திறப்பு நிகழ்விற்கு தலைமையேற்று நினைவேந்தல் உரையாற் றினார். திராவிடர் கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பத்திரிக்கையாளர் பா.ஹரிஹரன் நினைவேந்தல் உரையாற் றினர்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மறைந்த ‘சுயமரியாதைச் சுடரொளி’ க.சசி குமார் அவர்களின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
இப்படத்திறப்பு நிகழ்வினை தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஒருங்கிணைத்து நடத்தி னார். இறுதியாக தஞ்சை மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் அ.சுப்பிரமணியன் நன்றியுரையாற்றினார்.
மறைந்த சுயமரியாதைச் சுடரொளி க.சசிக்குமார் குடும்பத்தினருக்கு பத்திரிக்கை யாளர் சங்கத்தின் சார்பில் ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகம், பத்திரிக் கையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பொறுப் பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.