வேதாரண்யம், மார்ச் 9- பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மா.மீ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா வேதாரண்யத்தில் மிகச் சிறப்போடு கொண்டா டப்பட்டது.
திராவிடர் கழக திராவிட முன்னேற்றக் கழக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டு மறைந்த மா.மீ அவர்களின் நினை விடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், காப் பாளர் கி.முருகையன், நாகை மாவட்ட கழக செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா, மா.மீ அவர்களின் மகனும் வேதை நகர் மன்ற தலைவரும் திரா விட முன்னேற்றக் கழ கத்தின் நகரக் கழக செய லாளருமான மா.மீ.புகழேந்தி, வேதை மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் வே.முருகையன், வேதை கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சதாசிவம், கழக மாவட்ட துணைச் செயலாளர் கி.சுர்ஜித், மா.மீ அவர்களின் இளைய மகன் மாவட்ட வழக்குரைஞர் அணியின் அமைப்பாளர் மா.மீ.அன்பரசன், முத்துலட்சுமி மீனாட்சிசுந்தரம், வேதை நகர் மன்ற உறுப்பினர் உமா புகழேந்தி, கவிதா அன்பரசன், மா.மீ.புகழ் இனியவன், வேதை ஒன்றியத்தின் துணைத் தலைவர் ஆறுமுகம், வேதை ஒன்றியத்தின் துணைச் செயலாளர் பஞ்சாபகேசன், வர்த்தக சங்கத்தின் மாநில பொறுப்பாளர் சி.தென்னரசு, மா.மீ.பேரவை பொறுப்பாளர் ஜி.எம்.ராம்குமார், மாவட்ட தொண்டர் அணி எஸ்.வி.டி.அருள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பி.ஆர்.ஜிகே.விக்கினேஸ் மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அவர்கள் குடும்பத்தார் களும் பெருந்திரளாக கலந்து கொண்டு மாலை வைத்து மரியாதை செய்தார்கள்.
