நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவராக மிகச் சிறப்பாக பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை ரெ.ரெங்கநாதன் (வயது 82) அவர்கள் நேற்று (07.03.2026) உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
முதிர்ந்த வயதிலும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடக்கும் கழக நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாநாடுகள் அனைத்திலும் (கலந்துரையாடல் கூட்டம் உட்பட) தவறாமல் யாருடைய துணையுமின்றிக் கலந்து கொள்ளும் தீவிரமான பெரியார் பெருந்தொண்டர் – கொள்கை மாவீரர் ஆவார்!
அவர் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கழகத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும்.
அவர்தம் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
8.3.2026
அவரது இறுதி ஊர்வலம் இன்று (08.03.2026) மாலை 3.00 மணியளவில் திருக்குவளை அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது!
தொடர்புக்கு : 9486739881
குறிப்பு: அவர் மகன் திராவிடமணி அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், துணைத் தலைவர் கலி. பூங்குன்றனும் தொலைப்பேசியில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்கள்.
