சமீபத்தில் வெளியான குடிமைப்பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற தூய்மைப்பணியாளரின் மகளான நிகிள் சுவேடா என்பவர் பெருமையோடு தான் வெற்றி பெற்ற செய்தியை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு ஏ.கே.திவாரி என்ற லக்னோ உயர்நீதிமன்ற வழக்குரைஞர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவர் இவ்வாறு பதில் எழுதி உள்ளார்.
”என்ன யுபிஎஸ்சி (குடிமைப்பணியாளர் தேர்வு) வெற்றிக் கொண்டாட்டம்) என்னுடைய வீட்டு கழிப்பறை மிகவும் அசிங்கமாக இருக்கிறது. முகவரி அனுப்புகிறேன் ––- வந்து தூய்மை செய்துவிட்டுப் போ, நீ கேட்பதைவிட 50 ரூ அதிகம் தருகிறேன்” என்று பதிலிட்டுள்ளார்.
