கோடைகால தண்ணீர்ப் பந்தல்

1 Min Read

தஞ்சை மாநகராட்சி துணை மேயர் 

டாக்டர் அஞ்சுகம் பூபதி திறப்பு

அரசியல்

கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு பொது மக்களின் தாகம் தீர்க்க தமிழ்நாட்டு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி 07.04.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாநகராட்சி 51 வது வட்ட திமுக சார்பில் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து நல்ல குடிதண்ணீர், நீர்மோர், இளநீர், தர்பூசணி போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை  கொண்ட கோடைகால தண்ணீர் பந்தலை தஞ்சை மாநகராட்சி துணை மேயரும், தி.மு.க. மாநில மருத்துவரணி துணை செயலாளருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் ஏற்பாடு செய்து   திறந்துவைத்து பொதுமக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார். இந்நிகழ்வில் தி.மு.கழக 51வது வட்ட நிர்வாகிகள், தி.மு.க. ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *