‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சி அடைந்த நான்கு மாநிலங்களில் தமிழ்நாடு முன்னேற்றம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.6 இந்தியாவின் நான்கு மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில், கடந்த 4 ஆண்டுகளில் மகாராட்டிர மாநிலம் மிகக்குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு மராட்டிய மாநிலத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் செல்லும் வளர்ச்சியை எட்டியுள்ளது.

2024-2025 நிதியாண்டில் மகாராட்டிராவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.42,67,771 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் கருநாடகம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை விட இம்மாநிலம் பின்தங்கியுள்ளது.

கர்நாடகம் முதலிடம்

கரோனா காலத்திற்குப் பிந்தைய சூழலில் (2021-2022 முதல் 2024-2025 வரை), கருநாடக மாநிலம் சுமார் 65 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரை மய்யமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளின் அசுர வளர்ச்சியே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கருநாடகத்தின் ஜிஎஸ்டிபி ரூ.17,02,227 கோடியிலிருந்து ரூ.28,09,063 கோடியாக உயர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் குஜராத்

தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையில் வலுவாக உள்ள குஜராத் மாநிலம், 48 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ரூ.18,79,826 கோடியிலிருந்து ரூ.27,90,000 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு மூன்றாவது இடம்

இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ்நாடு, சுமார் 47% வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021-2022-இல் ரூ.21,36,351 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி, 2024-2025-இல் ரூ.31,55,096 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்தப் பொருளாதார அளவில் மகாராட்டிராவுக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடு ஒரு நெருக்கமான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *