சென்னை, மார்ச்.6 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் நேற்று (5.3.2026) நடை பெற்ற அரசு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், சுமார் ரூ.7.39 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார். மேலும், மருத்துவ உலகின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல்களை உள்ளடக்கிய ‘ஜே.எம்.எம்.சி. மெடிசின்’ (JMMC Medicine) என்ற மருத்துவ இதழையும் அவர் வெளியிட்டார்.கண் சிகிச்சைத் துறையில் தமிழ்நாட்டின் மைல்கல்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை எட்டியுள்ள முக்கிய சாதனைகளைப் பட்டியலிட்டார்:
குறைந்த பார்வை இழப்பு விகிதம்: தேசிய அளவில் பார்வை இழப்பு விகிதம் 1.99 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சிறப்பான தடுப்பு நடவடிக்கை களால் மாநிலத்தில் இது 1.18 சதவீதமாக குறைந்துள்ளது.
நடமாடும் கண் மருத்துவப் பிரிவுகள்: கடந்த 5 ஆண்டுகளில் சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் புதிய பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சைகள் மற்றும் முகாம்கள்: தமிழ்நாட்டில் உள்ள 97 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு கண் சிகிச்சை மய்யங்கள் மூலம் இதுவரை 4,15,301 கண் புரை அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மூலம் மாநிலம் முழுவதும் 4,502 கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய தொடர் நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (05.03.2026) சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 108 அவசரகால ஊர்தி சேவையை மேம்படுத்த வாட்ஸ்அப் (Whatsapp Chatbot) செயலியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.வினித் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி இராஜகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாந்தாராமன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
