மருத்துவர்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் பகுத்தறிவாளர்கள் கழக மாதாந்திர கூட்டத்தில் மனநல மருத்துவர் ராதிகா முருகேசன்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 12- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாதாந்திரக் கூட் டம் கடந்த 8.3.2023 சனிக்கிழமை மாலை 6:30 முதல் 8:00 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்செல்வன் தலைமை உரையாற்றினார். அவரது உரை யில் டாக்டர் ராதிகா முருகே சனை அறிமுகப்படுத்தி, வரவேற் புரை ஆற்ற மு.இரா.மாணிக் கத்தை அழைத்தார்.

வரவேற்புரையாற்றிய தென்சென்னை பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மு.இரா.மாணிக்கம் தமது உரையில் மருத்துவர் ராதிகா முருகேசனின் யூ டியூப் சேனலின் விழிப்புணர்வு செய்திகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.

அவரது உரையைத் தொடர்ந்து மனநல மருத்துவர் டாக்டர் ராதிகா முருகேசனுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்ற அழைத்தனர்.

ராதிகா முருகேசன்

“மனநலமும் – பகுத்தறிவும்” என்ற தலைப்பில் மனநல மருத் துவர் ராதிகா முருகேசன் உரை யாற்றினார்.

“ஒவ்வொரு பகுத்தறிவாளருக் கும் மனநலம் தெளிவானதாக வும், சமநிலையிலும் இருக்கும் என்றும், எந்த செய்திகளையும், கேள்விப்படும்போது அதற்கு உடனடியாக உணர்ச்சிவயப் படாமல் முழுமையாக உள்வாங் கிக் கொண்டு, அதனை முன், பின் விளைவுகளை அறிந்து, அறிவியலின் அடிப்படையில் சிந்திப்பவர்கள் என்பதை விளக் கினார்.

உண்மைக்குப் புறம்பான செய்திகள் வரும்போது உணர்ச் சிவசப்படக் கூடியவர்களால் செய்திகள் பரப்பப்படுகின்றது. இதை ஒரு பகுத்தறிவாளி அதில் இருக்கும் உண்மைகளை ஆராய்ந்தே கையாளுகின்றார். பகுத்தறிவாளிகள் தெளிவான மனநிலையில் உள்ளது போன்று ஒரு மருத்துவரும் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். தன்னு டைய சொந்தக் கருத்துகளை நோயாளிகளிடம் கூறாமல் நோயாளிகளுக்கு எது நல்லதோ, அதைப் பகுத்தறிந்து கூறுபவரே சிறந்த, மருத்துவராக இருக்க முடியும்’’ என பல்வேறு கருத்துக் களுடன் பெண்களுக்கு மன நலன் எவ்வாறு மனபலத்துட னும், தைரியமாகவும் செயல்பட வேண்டும் என விளக்கி கூறினார்.

“பல்வேறு பிரச்சினைகள் எனக்கு இருந்தாலும் சிறிது நேரம் கடவுளை வழிபட்டால் மன நிம்மதி தருகின்றது” என்று ஒரு பெண் வந்து என்னிடம் கூறினாள். நான் ஒரு கடவுள் மறுப்பாளராக, பெரியாரியவாதி யாக இருந்தாலும் நோயாளியின் மன அமைதியின்  நலன் கருதியே செயல்பட வேண்டுமே தவிர என் கருத்துகளை அவர்மீது புகுத்தக் கூடாது. “இதுவே ஒரு பெண் தனக்கு பேய் பிடித் திருப்பதாகவும், பில்லி, சூனியம் பிடித்திருக்கிறது என கூறினால் – அது தவறானது என விளக்கிக் கூறி உண்மையை எடுத்துச் சொல்வேன்.” இவ்வாறு மனநல மருத்துவர்களுக்கும் பகுத்து, அறிதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கிக் கூறினார்.

கேள்வி பதில்

அத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோழர்களு டன் கலந்துரையாடல் நடத் தினார். தோழர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்வி கேட்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து, அதற்கான விளக்கங் களை அருமையான, தெளிவான பதில்களை மருத்துவர் விளக்கிக் கூறினார்.

இறுதியாக தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தோழர் இரா.சு. உத்ராபழனிசாமி நன்றி யுரையாற்றிட பகுத்தறிவாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் இனிதே, சிறப்பாகவும் முடிவுற் றது.

கலந்து கொண்டவர்கள் 

புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், அறிவுவழி தாமோதரன், பகுத்தறிவு கழக பொதுச் செய லாளர் வெங்கடேசன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அருணா பத்மாசூரன் உள்ளிட்ட தோழர்கள் பலர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *